2025 மே 03, சனிக்கிழமை

கொட்டும் மழையிலும் யாழில் திரண்ட உறவுகள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின்  ஏற்பாட்டில்  குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது 

குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் “தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும்,  இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு” போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

 குறித்த போராட்டத்தின்போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X