2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்தார் டக்ளஸ்

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று  (01), சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

நேற்று  மதியம் 1 மணியளவில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, புதுவருடத்தை முன்னிட்டு, இந்திய மீனவர்களுக்கு உலருணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .