2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேவாலயத்தில் திருட்டு

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எஸ் தில்லைநாதன்

நெல்லியடி - விக்னேஸ்வரா வீதியில் அமைந்துள்ள சென்மேரிஸ் தேவாலயத்தில் இருந்த இலத்திரணியல் பொருள்கள் திருட்டு போயுள்ளதாக, ஆலய நிர்வாக செயலாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், நேற்று  (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (11) இடம்பெற்ற இத்திருட்டு சம்பவத்தின் போது, ஆலய அறையில் இருந்த பாடல் ஒலிபரப்பும் கருவி, அம்ப், மைக், வயர் என்பன திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .