2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தையிட்டி விஹாரையை சுமந்திரன், மாவை பார்வையிட்டனர்

Freelancer   / 2023 மே 04 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நிதர்ஷன் வினோத்

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விஹாரையையும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர்.

 

இதேவேளை, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .