Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், என். குகன்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபையினர் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், இன்று (17) 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
இதன் போது, மன்னார் மாவட்ட சாலை ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் காரமாக, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன், மன்னார், மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தன.
எனினும், மன்னாரில் இருந்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், யாழிலும் இலங்கைப் போக்குவரத்து சபையின் சேவைகள் முற்றாக முடங்கின.
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago