Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்
புடையண்பாம்பு தீண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலடிவீதி - உடுவில் பகுதியைச் சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற தாயே உயிரிழந்தவர் ஆவார்.
உயிரிழந்த பெண்ணுக்கு 1 வயதில் ஒரு குழந்தை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 25ஆம் திகதி இரவு, முற்றத்தில் உணவு அருந்திக்கொண்டிருந்த கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த போது, இருட்டில் புடையண்பாம்பு தீண்டியுள்ளது.
பாம்பு தீண்டியதை கண்ட கணவன் மனைவிக்கு முதலுதவி செய்த பின்னர் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்திருந்தார்.
பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பெண் நேற்று மாலை உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
46 minute ago
53 minute ago