Niroshini / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.
6 பொலிஸ் கொன்ஸ்டபிள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
19 minute ago
24 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
58 minute ago
1 hours ago