Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 15 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இலங்கையில், சகல மதுபானசாலைகளுக்கும் 2 நாள்கள் பூட்டப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர், விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - முடமாவடி மதுபானசாலைக்கு முன்பாக வைத்து, இன்று காலை 8 மணியளவில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 450 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago