2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் ஓரிரு நாள்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறை ஏற்பட்டுள்ளது. 

அதனையடுத்து, அவர்கள் வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்கென சென்றபோது,  அங்கு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில், மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து, சுகாதார பிரிவினர் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பவர்களின் சடலங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை உள்ள போதிலும், திங்கட்கிழமை (23) உயிரிழந்த குறித்த வயோதிப பெண்மணியின் சடலத்துக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண், கொரோனோ தொற்றினால் உயிரிழந்து இருக்கலாம் எனவும்  அவரின் ஊடாகவே மரண சடங்குக்கு சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனவும்,  அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .