2025 மே 05, திங்கட்கிழமை

மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடுகிறது

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 18 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று புதன்கிழமை கூடவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கு மிடையில் கடந்த மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடாத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார்.

அந்த அறிக்கையில் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கெதிராக முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள், முன்மொழியப்பட்டுள்ள தண்டனைகள் இன்று இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒழுக்காற்று சபையின் சிபார்சுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X