2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் கிணற்றில் ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2022 மே 04 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று (03) மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடற்றொழில் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X