2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

யாழ். போதை வியாபாரி சிக்கினார்

Janu   / 2026 ஜனவரி 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், ஐந்து சந்தி பகுதியில் போதைக்குளிசை வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வந்துள்ளதுடன்  ஐந்து சந்தி பகுதியில் வைத்து 3000 போதைக்குளிசைகள் உடமையில் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு  கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

செந்தூரன் பிரதீபன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .