2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

யாழில் சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்த இளைஞன்

Freelancer   / 2023 ஒக்டோபர் 28 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முச்சக்கர வண்டி சாரதியான இளைஞன் ,தனது முச்சக்கர வண்டியினுள் வைத்து சிறுவனுக்கு மது அருந்த கொடுத்துள்ளார். 

அதனை அறிந்த சிறுவனின் தாயார், அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  R
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X