2025 மே 03, சனிக்கிழமை

யாழில் பெண் கடத்தல்

Niroshini   / 2021 நவம்பர் 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில், நேற்றைய தினம், சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர், வானில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த பெண், தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, ஹயஸ் ரக வாகனத்தில் வந்தகும்பல் ஒன்று சகோதரன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு, பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X