Editorial / 2023 மே 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

மே தினமான இன்று (01) யாழ்ப்பாணத்தில், வாகன ஊர்வலமொன்று நடைபெற்றது. வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே வாகன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணித்தவர்கள் சிவப்பு கொடியை ஏந்தியிருந்தனர். சில வாகனங்களில் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து காலை 8.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .