2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’யாழ். மக்களுக்கு தொடர்ந்து சீனா உதவும்’

Niroshini   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்


சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் என, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்  தெரிவித்தார்.

 
யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில், இன்றைய தினம் (16) நடைபெற்ற யாழ்ப்பாண மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலருணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும் அதன் ஓர் அங்கமாகவே, சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலருணவுப் பொதிகளை வழங்குவதாகவும் கூறினார்.

இந்த உதவி வழங்கும் நிகழ்வை, ஓர் ஆரம்ப நிகழ்வாகவே தாங்கள் கருதுவதாகத் தெரிவித்ந அவர், இன்று ஆரம்பமான இந்நிகழ்வானது,  சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என தாங்கள் கருதுவதாகவும் கூறினார்.


குறிப்பாக, சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட   உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக  ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது  இலங்கைக்கு சீனா பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, வடக்கு - கிழக்கில் உள்ள மக்களுக்கான தடுப்பூசியை  பெற்றுக்கொடுப்பதில்  சீனா பெரும்பங்காற்றியுள்ளது எனவும்,  அவர் கூறினார்.

"இதேவேளை, புதன்கிழமை (15), வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்துக்குமென ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரப்பொறிமுறையையும்  கையளித்துள்ளோம். அதேபோல் 5 மடிக்கணினிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்துக்கு வழங்கியுள்ளோம் 

"இவை அனைத்தும் ஓர் ஆரம்பமாகவே நாங்கள் கருதுகின்றோம். எதிர்காலத்தில் சீன தூதரகம் யாழ்ப்பாணத்துக்கு  தொடர்ச்சியான உதவிகளை வழங்கும். 

"கொரோனா  காலத்தில்  இந்த சிறிய உதவி வழங்கப்படுவதை ஓர் ஆரம்பப் புள்ளியாகவே நாங்கள் பார்க்கின்றோம். எதிர்காலத்தில் உதவித்திட்டங்கள் வழங்க முடியும்" எனவும், தூதுவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .