Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
தற்கொலை என மூடிமறைக்க முற்பட்ட சகோதரனின் கொலைச் சம்பவத்தை வெளிக்கொண்டுவர முனைவதன் காரணமாக, இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொடர்பில், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவனின் சகோதரனால், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முன்தினம், (21) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், 17.11.2020 அன்று, அவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு, தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை பொலிஸார் தற்கொலை என தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் அவரது சகோதரன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் பணிப்புக்கமைய, யாழில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த விசாரணைக் குழு, இவ்வாண்டு, மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், உறவினர்களால் இக்கொலை தொடர்பில் சந்தேகநபர்களும், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன.
அதாவது, அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கதவு திறந்தவர்கள் ஊடாகவே மேற்படி மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவந்தது.
ஆனால், அதற்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு சமூக ஊடகத்தில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர்களின் ஊரிலும் பலருக்கு மாணவன் இறந்தமை தொடர்பான தகவல் தெரிந்திருந்தது.
இது தொடர்பான தகவல்களை விசாரணை குழுவுக்கு வழங்கியும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் சில இல்லை எனவும் மீண்டும் தகவல் தருமாறும் விசாரணைக் குழுவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) விசாரணை பிரிவுக்கு சென்று தாங்கள் வழங்கிய தகவல்கள் எவ்வாறு தவறவிடப்பட்டது என பொலிஸாருடன் முரண்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் பின்தொடர்ந்ததன் காரணமாக அவரது சகோதரன் தனது வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவரது சகோதரன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முன்தினம், (21) மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
16 minute ago
36 minute ago