2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் எச்சரிக்கை

Freelancer   / 2022 ஜூன் 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், நிதர்சன் வினோத்

யாழ். மாவட்டத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. 

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில்  வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில்  பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணய விலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களை விற்கவேண்டும். 

சில்லறை விற்பனையாளர்ளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். 

அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக  காணப்படுகின்றது.  எதிர்காலங்களில் யாழில்   பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 

யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின்  கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாடுவிலையினை  மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எனவே பொதுமக்களுக்கு கஷ்டம்  ஏற்படுத்தாதவாறு அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X