2025 ஜூலை 28, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Thipaan   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தி பகுதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (27)  6.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த 62 வயதுடைய நிக்ஸன் ஸ்ரீபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. திருமணச் சடங்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X