2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விமானங்களைப் பார்வையிட்ட சிறார்கள்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி புனித திரெசா கல்லூரியின் பாலர் வகுப்பு மாணவர்கள், பலாலி விமான நிலையத்துக்கு நேற்று சென்று, விமானங்களைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தினை பார்வையிடுவதற்கு, அனுமதியினை அவர்கள் கோரியிருந்தனர்.

இதற்கான அனுமதியினைஈ பாதுகாப்புப் படைகளின் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி வழங்கியிருந்தார்.

பஸ்ஸொன்றில் மாணவர்களை, இராணுவத்தினர் விமான நிலையம் அழைத்துச் சென்று, அங்குள்ள விமானங்களைக் காண்பித்தனர்.

75க்கு அதிகமான மாணவர்கள், இக்கல்விச் சுற்றுலாவினை மேற்கொண்டதுடன், மாணவர்களின் பெற்றோரும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .