Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 02 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) விடிகாலை 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ச.சத்தியானந் என்பவரே உயிரிழந்துள்ளார்.
3 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 hours ago
6 hours ago