2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வல்லையில் சடலம் மீட்பு

Freelancer   / 2023 மே 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . 

பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான வசந்தகுமார் ஸ்ரீகாந்த் (வயது 36)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால் , கொலையா ? தற்கொலையா ? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .