2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வழிபாட்டில் ஈடுபட்ட வயோதிப பெண் உயிரிழப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

கொட்டடி பகுதியில் உள்ள கோவிலில் வழிபாட்டுக் கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியைச் சேர்ந்த இராஜேந்திரா சந்திரவதனா (வயது - 68) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து, நேற்று  (12) கொட்டடி பகுதியில் உள்ள கோவிலுக்கு வருகை தந்து வழிபாடில் ஈடுபட்டிருந்த போதே, மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்களால் குறித்த வயோதிப பெண் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .