Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
கொக்குவில் - கேணியடிப் பகுதியில், நேற்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்ற இளைஞனே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த 3 பேர், இவ்விளைஞன் மீது வாள்வெட்டை நடத்திவிட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .