2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாள்வெட்டு சம்பவத்தை டிக் டாக்கில் பதிவிட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2023 மே 13 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்ட 8 பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ரஜீவன் இன்று (13) உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நெல்லியடி பகுதியில் வைத்து 8 பேர் நேற்று  வெள்ளிக்கிழமை (12) இரவு காங்கேசன்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்ததுடன் வாள், கோடரி என்பவற்றையும் மீட்டனர்.

இதையடுத்து 8 பேரையும் இன்று சனிக்கிழமை(13) பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்ட போது எட்டு பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X