2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

விபத்து ஏற்படுத்திய சாரதி உயிர் மாய்ப்பு

Janu   / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் , விபத்தொன்றை  ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தவறான முடிவெடுத்து  தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) பதிவாகியுள்ளது.  

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் திங்கட்கிழமை (25)  இரவு விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி , விபத்து இடம்பெற்ற இடத்திலேயே முச்சக்கர வண்டியை விட்டு தப்பி சென்றுள்ளதுடன்  செவ்வாய்க்கிழமை (26)  தனது வீட்டுக்கு அருகில் தன் உயிரை மாய்த்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  

கட்டுவான் மேற்கை  பகுதியை சேர்ந்த ,  மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X