2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்; 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொவிபால சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாவை மேற்கொண்டு சென்றிருந்த பண்டாரகமவைச் சேர்ந்த ஒரு குழுவினர் பயணித்த பஸ் வண்டியுடன் லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானது. கொவிபால சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்பஸ் வண்டியின் பின்புறமாக இந்த லொறி மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (ஜயரட்ன விக்கிரமராய்ச்சி)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .