2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் தற்போது கற்பிட்டி, ஆலங்குடாவில் வசிக்கின்றவருமான  3 பிள்ளைகளின் தந்தையான ஏ.எச்.அஷ்ரப் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவரின் மோட்டார் சைக்கிள் மாம்புரி பகுதியில் பொலிஸாரினால் போடப்பட்டுள்ள தடைக்கம்பி மீது மோதி விபத்திற்கு உள்ளானதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த இவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X