2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.முஸப்பீர்

மதுரங்குளி, சுகந்தகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை முந்தல் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

இதன்போது  80 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட  சோதனையின்போதே இருவரை கைதுசெய்துள்ளதுடன், சட்டவிரோத மதுபானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் நீண்ட நாட்களாக  சட்டவிரேத மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கொத்தான்தீவு - கறுவாமடு பிரதேசத்திலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 5 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X