2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டிமுனை பிரதேசத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் - 2014ஆம் ஆண்டுக்கான கண்காட்சியை முன்னிட்டு நடமாடும் சேவை, மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு, அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆகியன முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் இதன்போது வழங்கப்பட்டன.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X