2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்பனை நிலையம் சுற்றிவைளப்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்,எம்.என்.எம்.ஹிஜாஸ்

கஞ்சா விற்பனை செய்துவரும் இடம்மொன்றைச் சுற்றிவளைத்த ஆனமடுவ பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 11 கிலோ கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிகம, கராயக்கம பிரதேசத்திலுள்ள கஞ்சா விற்பனை நிலையமே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை சுற்றிவளைக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஆனமடுவ பொலிஸார் குறித்த இடத்தைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

தனமல்வில பிரதேசத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாகக் கொண்டு வந்து சிறு பைக்கட்டுக்களில் பொதி செய்து தாம் விற்பனை செய்துவந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தம்மிடம் கூறியதாக பொலிஸார் கூறினர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X