2025 மே 15, வியாழக்கிழமை

சட்டவிரோத மதுபான நிலையம் சுற்றிவளைப்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 75 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இன்று வியாழக்கிழமை காலை இச்சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .