2025 மே 15, வியாழக்கிழமை

முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு மீண்டும் விளக்கமறியல்

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர், எம்.என்.எம். ஹிஜாஸ்

நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் 27ஆம் திகதி 5,000 ரூபா ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் கவனத்த்திற்கு இன்று வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவரை ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கடந்த ஜுன் 27ஆம் பிணையில் விடுவித்த ஆனமடுவ நீதவான், சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாமெனவும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிடுமாறும்; நிபந்தனை விதித்திருந்தார்.

இதேவேளை, முழந்தாளிடப்பட்ட ஆசிரியையும் அவரது கணவரையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .