2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேலும், 30 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மதுரங்குளி, பாலைச்சோலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மதுபான விற்பனையில் இவர் ஈடுபட்டுவந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை  இன்று வியாழக்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X