2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ தோப்பு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்புக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X