2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல், கருங்காலிச்சோலை காட்டு பகுதிக்குள் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்த இடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முந்தல் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தல் பொலிஸாருக்கு கிடைத்;த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இடத்திலிருந்து போத்தலில் அடைக்கப்பட்ட 80 சட்டவிரோத மதுபான போத்தல்களும் மூன்று பெரல் கோடாவும், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கருவளபெத்த மற்றும் செம்புக்குளி பிரதேசங்களினை சேர்ந்தவர்களாவர். முந்தல் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .