Princiya Dixci / 2017 மார்ச் 09 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டு ஆனைவிழுந்தான் பறவை சரணாலயத்தில் நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்ட காட்டுத் தீ இரவு 9 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் பொறுப்பதிகாரி கேரணல் ருத்ரிக்கோ தெரிவித்தார்.
சரணாலயத்தின் சுற்று வட்டத்தில், வரட்சியான நிலையில் காணப்பட்ட புற் தரைக்கு யாராவது தீ வைத்து இருக்கலாம் எனச் சந்தேகிப்படுகிறது.
இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், இராணுவம், சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு, ஆராச்சிக்கட்டு பிரதேச சபை, பொலிஸ் மற்றும் வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago