2025 மே 05, திங்கட்கிழமை

தியானத்திலிருந்த போது உயிரிழந்த பிக்குவின் எலும்புக்கூடு மீட்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சனத் கமகே

பொலன்னறுவை, திம்புலாகலப் பிரதேசத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, அரலகன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில், தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது மரணித்த பிக்கு ஒருவருடையது எலும்புக்கூடாக இது இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மெதகிரியகே ரூபலாலன்கார என்ற பிக்குவின் எலும்புக்கூடே இவ்வாறு மீட்கப்பட்டிருக்கலாம் என்று, எனச் சந்தேகிக்கப்படுவதாக, திம்புலாகல ஆரன்யவைச் சேர்ந்த பிக்கு ஒருவர், சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரணையில் அரலகங்விலப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X