Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் நகரில் பழைய மின்மாற்றிகளுக்குப் பதிலாகப் புதிய மின்மாற்றிகளும் மின்கம்பிகளுக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பு மின் வயர்களும் பொருத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் எனவே, இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட்; பதியுதீனிடம் முன்னாள் புத்தளம் நகரசபை உறுப்பினரும் அ.இ.ம.கா மத்திய குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து, புத்தளம் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டியவின் கவனத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொண்டு வந்ததுடன், அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மின்சக்தி அமைச்சர், இலங்கை மின்சாரசபையின் பொது முகாமையாளர் மற்றும் வடமேல் மாகாண மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்து, உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு பணித்தார்.
இதற்கமைய, குளியாப்பிட்டியிலிருந்து புத்தளம் நகரில் மின்மாற்றிகள், புதிய பாதுகாப்பு மிக்க மின் வயர்கள் பொருத்தும் நடவடிக்கையில், 5 குழுக்களைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை காரணமாகப் புத்தளம் நகரில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
3 hours ago
3 hours ago