2025 மே 05, திங்கட்கிழமை

பஸ்கள் மோதி விபத்து: ஐவர் காயம்

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில், ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் சிலாபத்திலிருந்து  புத்தளம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும், ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இருண்டு பஸ்களிலும் பயணிகள் இருந்ததாகவும ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X