Menaka Mookandi / 2017 ஜனவரி 11 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மட்டக்களப்பு- பொலன்னறுவைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றில் மிதிபலகையில் பயணித்த நவரொருவர், பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் வைத்து, தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்து படுகாயமடைந்த குறித்த நபர், வெலிகந்தை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட போதும், சிகச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பம் தொடர்பில், பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்.
இதேவேளை, மஹியங்கனை, மானம்பிட்டிய வீதியில் அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரலங்வில, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். மானம்பிட்டிய, நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி, அருகில் இருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026