2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிக்களி பிரதேசத்தில், தெரிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாண விவசாய, கடற்றொழில் அமைச்சினால் இதற்காக, 10 இலட்சம் ரூபாய்  நிதி, ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

கற்பிட்டி நாச்சிக்களி பிரதேச மீனவர் சங்கக்  கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,  வடமேல் மாகாண விவசாய, கடற்றொழில் அமைச்சர் சுமல் திசேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது  40 மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X