George / 2017 ஜூன் 13 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷித குமார சில்வா
பேருவளை ரேகுவ வீதி மீன்பிடி துறைமுகத்துக்கு முன்னால் உள்ள வீதி, கடந்த 27ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
சேதமடைந்து 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பாதை புனரமைக்கப்படவில்லை என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான பாரிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பில், பேருவளை நகர சபையின் செயலாளர் பீ.டீ.ஏ.கே.கயந்தியிடம் கேட்போது, “இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025