2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

HUTCH கொழும்பு வாடிக்கையாளர் சேவை மய்யம் தரமுயர்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக HUTCH, தனது பம்பலபிட்டி அலுவலகத்தில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மய்யத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில், திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். HUTCHஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lankaவின் முகாமைத்துவ உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

HUTCH, அண்மையில் நாடு முழுவதும் தனது 4G வலையமைப்பை செயற்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கும் இருப்பதற்கு வலுவூட்டியது. அதன் 2G, 3G வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்தப் பாரிய வலையமைப்பு விரிவாக்கம், HUTCH தனது வாடிக்கையாளருக்கு சிறந்த வலையமைப்பு அனுபவத்தை வழங்க உதவியுள்ளதுடன், அவர்களின் முக்கிய சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட மலிவான மற்றும் புத்தாக்கமான தீர்வுகளையும் வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .