2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு கடனாக பெற அனுமதி

A.P.Mathan   / 2013 மார்ச் 01 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 210 இரும்பு பாலங்களை அமைப்பதற்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த தொகை இலங்கையின் ஹற்றன் நஷனல் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நாணயமாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாவின் இந்த கடன் தொகையின் பெறுமதி 1.2 பில்லியன்களாக அமைந்துள்ளது. இந்த கடன் தொகையை மீள் செலுத்தும் காலம், வட்டி வீதம் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .