2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

உலக பங்குகள் ஜூன் 2008இன் பின்னர் உயர்வான பெறுமதியை எட்டின

A.P.Mathan   / 2013 மார்ச் 11 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பங்குகள் ஜூன் 2008இன் பின்னர் முதல் தடவையான உயர்வான பெறுமதியை எட்டியிருந்தன. ஜப்பானிய யென்னுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதியும் கடந்த மூன்றறை ஆண்டுகளில் பதிவான அதியுயர் பெறுமதியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவின் தொழில் வாய்ப்புகளிலும் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சீனாவை பொறுத்தமட்டில் கடந்த மாதம் மொத்த ஏற்றுமதி 21.8 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

ஐரோப்பிய பங்குகளும் தொடர்ச்சியான உயர்வு பெறுமதிகளை பதிவு செய்திருந்ததுடன், ஆசியாவின் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிக்கெய் நான்கரை வருடங்களில் பதிவான அதியுயர் பெறுமதியை பதிவு செய்திருந்தது.

தற்போது உலக சந்தைகளில் பெரும்பாலும் அதிகளவு ஆபத்தை கையாளும் விதத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக உலக வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை பொறுத்தமட்டில், கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 160,000 தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .