2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2013 முதல் அரையாண்டில் ,லங்கைக்கு 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகள்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு மொத்தமாக 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாகும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதில் அதிகளவு பங்களிப்பை கொழும்பு இன்டர்நஷனல் கொன்டெய்னர் டேர்மினல் வழங்கியிருந்தது. சீனா மற்றும் ஹொங் கொங் 116.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை மேற்கொண்டிருந்தன. ,தனை தொடர்ந்து, கெய்ன் லங்கா பிரைவேற் லிமிடெட் 29.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

MAS ஃபெப்ரிக் பிரைவேற் லிமிடெட் 25.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹொங் கொங் இலிருந்து முதலீடு செய்திருந்ததுடன், ,ந்தியாவிலிருந்து கிரிஷ் ட்ரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு பிரைவேற் லிமிடெட் 20.01 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தது.

203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகள் உட்கட்டமைப்பு செயற்பாடுகளிலும், 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உற்பத்தி செயற்பாடுகளிலும் 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேவைகள் துறையிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .