2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையில் HCL Technologies

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற HCL Technologies (HCL), இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுடன், தனது உலகளாவிய விநியோக மய்யத்தை கொழும்பில் நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது. பிராந்தியத்துக்குள் தனது இருப்பைக் குறிக்கும் வகையில், உலகளாவிய தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக வேலைவாய்ப்பை அதிகரிப்பது, வளங்களை வழங்குதல், உள்நாட்டில் திறமைகளை மேம்படுத்துவது HCL இன் நோக்கமாக அமைந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.  

1976ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட HCL Technologies என்பது ஒரு உலகளாவிய அடுத்த தலைமுறை தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன், நிறுவனங்கள் டிஜிட்டல் யுகத்துக்காக தங்கள் வர்த்தகச் செயற்பாடுகளை மறுவடிவமைக்க உதவி வருகிறது. ஒரு உண்மையான பன்னாட்டு நிறுவனமான HCL இந்தியாவில் தலைமையலுவலகத்தைக் கொண்டுள்ளது, இது பல்வேறு முக்கிய தொழிற்றுறைகள்,  தொழிற்பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளது. 

இலங்கையில் HCL இன் வணிக மற்றும் மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், நாட்டில் அறிவு சார் சேவைகள் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான திறன்மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதும் ஆகும். இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் ஒத்துழைத்து, HCLஇன் உள்நாட்டு நிறுவனமான HCL Technologies Lanka (Private) Limited அதன் பணி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை உள்நாட்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் காத்திரமான வழியில் ஒருங்கிணைத்து, நாட்டில் திறமைசாலிகள் குழாத்தை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும். கொழும்பிலுள்ள இந்த விநியோக மய்யத்தின் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு பயன்பாடுகள் (Applications), கணினி ஒருங்கிணைப்புச் சேவைகள், உள்கட்டமைப்புச் சேவைகள், டிஜிட்டல் செயல்முறை செயல்பாடுகள் அடங்கிய துறைகளில் பெறுமதிமிக்க சேவைகள் வழங்கப்படும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X