Simrith / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

KMUTNB இல் உள்ள தொழில்துறை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் ஆகியவை கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.






கிங் மோங்குட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வடக்கு பாங்கொக் (KMUTNB) மற்றும் இலங்கையின் டைம்ஸ் ஸ்கூல் ஒஃப் ஹையர் எடுகேசன் ஆகியவற்றில் உள்ள தொழில்துறை தொழில்நுட்பக் கல்லூரி, நேற்று ஒகஸ்ட் 26, 2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையில் கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி கூட்டாண்மை மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டைம்ஸ் உயர்கல்விப் பாடசாலையின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜனக ரத்னகுமார மற்றும் நிறுவனத்தின் ஆலோசகர் சானக பெர்னாண்டோ ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
KMUTNB ஐப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர், பேராசிரியர் Smith Songpiriyakij PhD, பல்கலைக்கழகத்தின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

CIT KMUTNB மற்றும் டைம்ஸ் ஸ்கூல் ஆஃப் ஹையர் எடுகேசன் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொழில்துறை தொழில்நுட்பக் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவருவதுடன் மாணவர்களுக்கு உலகளாவிய வெளிப்பாடு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 minute ago
36 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
43 minute ago
1 hours ago