A.P.Mathan / 2020 மார்ச் 22 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மார்ச் 23ஆம் திகதி குறைந்த இரண்டு (2) மணி
நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியானது இணையவழிக் கொடுப்பனவுகளைப் பயன்படுத்துமாறும் ஏதேனும் வங்கியின் சனநெரிசல் குறைந்த ஏரிஎம் இயந்திரங்களில் பணம் மீளெடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.
அத்தகைய பணிகளை வழங்குவதில், பெற்றுக்கொள்வதில் அவசியமான சுகாதார மற்றும் பாதுகாப்புத் தேவைப்படுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் வங்கிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி ஆலோசனைகளையும் வழங்குகின்றது.
6 minute ago
13 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
22 minute ago
3 hours ago